×

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம்: ஐ.நா சபை எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய ஆசிய துணைக் கண்ட நாடுகளில் 150 முதல் 200 அல் கொய்தா தீவிரவாதிகள் அந்நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

ஐஎஸ், அல்-கொய்தா தொடர்பான தீவிரவாதிகள் குறித்த ஐநாவின் தீவிரவாத கண்காணிப்பு மற்றும் தடை குறித்த 26-வது அறிக்கை வெளியிடப்பட்டது. அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகார் மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வருகிறது. வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 முதல் 200 அல்-கொய்தா தீவிரவாதிகள் வரை இருக்கக்கூடும்.

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத், தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். ஐஎஸ்எல் அமைப்பின் இந்தியக் கிளை (ஹிந்த் விலாயா) கடந்த 2019-ம் ஆண்டு மே 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் 180 முதல் 200 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags : militants ,UN ,Kerala ,Karnataka ,ISIS , ISIS, Terrorist, UN
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து