சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு போதுமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் நியாயவிலைக் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்ரமணியம் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.