×

குட்கா விற்ற வியாபாரி கைது

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் ரகசியமாக கடைகளுக்கு சப்ளை செய்து, மறைமுகமாக விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் உத்தரவின்பேரில் பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பொன்னேரி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மளிகை கடையில் 50க்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து மளிகை கடை உரிமையாளர் முத்து (30) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.    


Tags : Trader , Gutka trader arrested
× RELATED லாரி மோதியதில் வியாபாரி பலி