×

ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பலாத்காரம்: கூலி தொழிலாளி கைது

செய்யூர்: மதுராந்தகம் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், பிரிந்தனர். பின்னர், கோபால் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து, கோபால் அவரது தங்கை ஊரான செய்யூர் அருகே பவுஞ்சூர் அடுத்த வடக்கு வாயலூர் கிராமத்துக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது, அவரது தங்கை வீட்டின் அருகே வசிக்கும் 18 வயது இளம்பெண்ணுடன், கோபாலுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை சாதகமாக்கி கொண்ட கோபால், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபாலை கைது செய்தனர்.

Tags : teenager ,Mercenary , Teen, rape, mercenary, arrested
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை