×

கடந்த 5 ஆண்டுகளாக கைவரிசை; பிச்சைக்காரர்களை குறிவைத்து பணம் பறித்த வாலிபர் கைது: கூட்டாளிகளும் சிக்கினர்

சென்னை: மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கண்ணம்மாள் (75) என்பவர், பிச்சையெடுத்து, வசித்து வருகிறார். கடந்த 18ம் தேதி நள்ளிரவு பைக்கில் வந்த 2 பேர்  சாலையோரம் தூங்கி கொண்டிருந்த கண்ணம்மாளை தாக்கி, அவர் வைத்திருந்த 70 ரூபாயை பறித்தனர். அருகில் இருந்த மற்றொரு பிச்சைக்காரர் சங்கரன் (65) என்பவரையும் தாக்கி 50 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், ராயப்பேட்டையை சேர்ந்த சூலைமான் (23) என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து பணம் பறித்தது தெரிந்தது.

பொதுமக்களிடம் வழிப்பறி செய்தால் போலீசில் சிக்கி விடுவோம் என்பதால், இவர் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை முழுவதும் சாலையோரம் வசிக்கும் பிச்சைக்காரர்களை மட்டும் குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பிச்சைக்காரர்கள் அளிக்கும் புகாரை போலீசார் கண்டுகொள்ள மாட்டார்கள், என திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். கொள்ளையடிக்கும் பணத்தில் கஞ்சா மற்றும் மது பாட்டில் வாங்கி தனது நண்பர்களான தனபாலன் (20), சக்திவேல் (21) அகியோருடன் சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளார். இதையடுத்து, சூலைமான் மற்றும் அவரது கூட்டாளிகள் தனபாலன், சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Handcuffs, beggar, money launderer, arrested
× RELATED போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முதியவர் கைது