×

தொற்றால் இறந்தவர்களின் சடலத்தை தூக்கும் பளு தூக்கும் வீரர்

பெங்களுரு: பெங்களூருவை சேர்ந்தவர் பிரபல பளுதூக்கும் வீரர் முஹமது அஸ்மத்துல்லா. சர்வதேச போட்டிகளில் 295 கிலோவை தூக்கி புகழ்பெற்ற இவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்  பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, தன்னை மெர்சி இயக்கத்துடன் இணைத்துக் கொண்டு, இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கொரோனாவால் இறந்தவரின் உடலை சுமக்கும் போது நான் அனுபவிக்கும் வலி மற்றும் மனவேதனையை  விளக்க முடியாது. அவரின் குடும்பத்தினர்படும் துன்பத்தை நான்  பார்க்கிறேன்.

அச்சத்தால் உதவிக்கு வர அனைவரும் தயங்குகின்றனர். எனவே, அவர்களின் மனவேதனையை உணர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதி நேர பணியாக இதனை மேற்கொள்கிறேன். இதனால், எனக்கு ஒருவித மன நிம்மதி கிடைக்கிறது. இந்த மாதம் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த பணியில் ஈடுபட்டுள்ளேன்,’’ என்றார்.


Tags : Dead by infection, weightlifter
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்