×

தினசரி புதிய உச்சத்தை தொடும் பாதிப்பு; தமிழகத்தில் ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா: மற்ற மாவட்டங்களில் கட்டுக்கடங்காமல் பரவுகிறது

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை தொடக்கத்தில் சென்னையில் தினசரி  ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் தினசரி 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் மாவட்டங்களில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி 5 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தினசரி அதிகரித்து வரும் நிலையில், நேற்று புதிய உச்சமாக தமிழகத்தில் 6785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 65,150 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 6,785 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,299 பேர், விருதுநகரில்  424 பேர், செங்கல்பட்டில் 419 பேர்,திருவள்ளூரில்  378 பேர், காஞ்சிபுரத்தில்  349 பேர், மதுரையில் 326 பேர், தூத்துக்குடியில் 313 பேர், கன்னியாகுமரியில் 266 பேர், தேனியில் 234 பேர், ராணிப்பேட்டையில் 222 பேர், திருச்சியில் 217 பேர், கோவையில் 189 பேர், தஞ்சையில் 186 பேர், க.குறிச்சியில் 179 பேர், வேலூரில் 174 பேர், நெல்லையில் 171 பேர், விழுப்புரம் 164, தி.மலையில் 134 பேர், சேலத்தில் 122 பேர், திருவாரூரில் 96 பேர், புதுக்கோட்டையில் 95 பேர்,

கடலூரில் 91 பேர்,தென்காசியில் 93 பேர், சிவகங்கையில் 82 பேர், கிருஷ்ணகிரியில் 82 பேர், திண்டுக்கலில் 80 பேர், ராமநாதபுரத்தில் 72 பேர், திருப்பத்தூரில் 56 பேர், நாகையில் 46 பேர், அரியலூரில் 37 பேர், தர்மபுரியில் 36 பேர், நீலகிரியில் 34 பேர், ஈரோட்டில் 25 பேர், நாமக்கலில் 28 பேர், திருப்பூரில் 18 பேர், பெரம்பலூரில் 16 பேர், கரூரில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 4,137 பேர் ஆண்கள். 2,468 பேர் பெண்கள். தற்போது வரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 389 ஆண்கள், 78,337 பெண்கள், 23 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 6,504 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 279  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 53,132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 88 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 66 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 22 பேர்,மதுரையில் 10 பேர்,விருதுநகரில் 6 பேர், திருவள்ளூரில் 5 பேர், குமரியில் 5 பேர், கோவையில் 4 பேர், நெல்லையில் 4 பேர், காஞ்சிபுரத்தில் 4 பேர், செங்கல்பட்டில் 4 பேர், திண்டுக்கலில் 3 பேர்,

ராணிப்பேட்டையில் 3 பேர், தென்காசியில் 2 பேர், திருவண்ணாமலையில் 2 பேர், தேனியில் 2 பேர், வேலூர், திருச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகை , சேலம் , தூத்துக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை , புதுக்கோட்டை, திருப்பூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் எந்தவித இணை நோய்கள் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,districts ,Tamil Nadu , Tamil Nadu, Corona
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 2...