×

நகை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சி..! விண்ணை தொடும் அளவிற்கு தங்கத்தின் விலை ரூ.304 உயர்ந்து சவரனுக்கு ரூ.39,080-க்கு விற்பனை..!!

சென்னை: விண்ணை தொடும் அளவிற்கு தங்கத்தின் விலை அதிகளவில் உயர்ந்து வருகிறது. மேலும் புதிய பல வரலாற்று விலைப்படிகளை சந்திக்க வைக்கின்றது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

பொதுமக்கள் தங்கத்தின் மீது அதிக நாட்டம் செலுத்தாத நிலையிலும், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தவர்கள், இனி நடத்தலாம் என நினைக்கும் சூழலில், தங்கத்தின் விலை தொடர்ந்து, அதிகரித்து வருவது அவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கடந்த 9ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் 37ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று 38ஆயிரத்தை கடந்த நிலையில், இன்று புதிய உச்சமாக 39 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.39,080-க்கு  விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : lovers , jewelery lovers,Gold prices,
× RELATED தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி