×

கொரோனா பீதியால் மன அழுத்தம் டிரான்ஸ்பார்மர் மின்கம்பியை பிடித்து முதியவர் தற்கொலை: திண்டுக்கல் அருகே பரிதாபம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கொரோனா பீதியில் மின்கம்பியை பிடித்து பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் அருகே மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (55). பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர். இவருக்கு கடந்த 10 நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து அழகர்சாமி திண்டுக்கல் ஜிஹெச்சில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரிந்தது. எனினும் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததால் தனக்கு கொரோனா பாதி்ப்பு இருக்குமோ என்ற மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அழகர்சாமி திண்டுக்கல் கல்லறை மேடு அருகேயுள்ள டிரான்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Dindigul ,tragedy , Elderly man ,commits, suicide, holding transformer power line,corona panic,Tragedy,dindigul
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...