×

ரம்மி விளையாட்டை தடை செய்க; வேலையில்லா இளைஞர்களின் நேரம், சிந்திக்கும் திறனை ஆன்லைன் விளையாட்டுகள் கெடுக்கிறது : நீதிபதி வேதனை

மதுரை : ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். வேலையில்லா இளைஞர்களை குறிவைத்து ஆன்லைன் விளையாட்டு மோசடி நடப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். சீட்டு விளையாடியதாக தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய பரிந்துரைத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்குக்காகவே சீட்டு விளையாடியதாக சிலுவை தரப்பிலான வாதத்தை ஏற்று, சிலுவை வழக்கை ரத்து செய்தார் நீதிபதி புகழேந்தி.அத்துடன், பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடுவோர் மீது வழக்குப்பதிவு பதிய வேண்டாம் என்று போலீசாருக்கு அறிவுறுத்திய நீதிபதி புகழேந்தி, பணம் வைத்து சீட்டு விளையாடுபவர்கள் மீது வழக்கு தொடரலாம் என உத்தரவிட்டார். மேலும் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதித்தது போல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறிய அவர், தெலுங்கானாவில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு அரசு தடை விதித்து உள்ளது. செல்போனை திறந்தாலே மோசடியான விளையாட்டு விளம்பரங்கள் தான். பணத்தை மையமாக வைத்து பல ஆன்லைன் விளையாட்டுகள் நடைபெறுகிறது. வேலையில்லா இளைஞர்களின் நேரம், சிந்திக்கும் திறனை ஆன்லைன் விளையாட்டுகள் கெடுகிறது. ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும், என்றார்.


Tags : game ,Judge , Rummy, ban, unemployment, youth, time,, online, judge, pain
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...