சென்னை: வேடந்தாங்கல் சரணாலயம் அருகே செயல்படும் தனியார் மருந்து நிறுவன விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சரணாலய பகுதிகளை மேம்படுத்தவே சுற்றுப்பரப்பளவை 3.கி.மீட்டராக குறைக்க முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தனியார் மருந்து நிறுவன விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.