கேரளா: தூதரகம் பேரில் கடத்தப்பட்ட தங்கக்கட்டிகள் திருச்சியில் விற்க்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. திருச்சி மற்றும் மராட்டியத்தில் உள்ள சாங்லியில் விற்றதாக ஸ்வப்னா கூட்டாளி வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சியில் தங்கக்கட்டிகளை வாங்கிய நகைக்கடை அதிபர் குறித்தும் கூட்டாளி கே.டி.ரமேஷ் தகவல் அளித்துள்ளார். தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா கத்தாரில் 2-வது திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.