கேரளா: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை மீண்டும் என்ஐஏ விசாரித்து வருகிறது. சிவசங்கர் உள்ளிட்ட கேரள தலைமைச் செயலகத்தின் சிசிடிவி பதிவுகளை என்ஐஏ கோரியுள்ளது. விமான நிலையத்தில் தொடங்கிய தங்கக்கடத்தல் விசாரணை தலைமைச் செயலகம் நீண்டுள்ளது. கேரள தங்கக்கடத்தலில் சுங்க அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளது. சுங்கத்துறை உயர் அதிகாரிகளிடம் ஸ்வப்னா பேசியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியது என தகவல் தெரிவித்துள்ளது.