×

12.87 பேர் பாதிப்பு; 30,601 பேர் பலி.. இந்தியாவில் கொரோனாவை வென்றவர்களின் எண்ணிக்கை 8.17 லட்சம் ஆக உயர்வு!!!

புதுடெல்லி: நாட்டில் எப்போதும் இல்லாத வகையில், புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 49,310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல், 740 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பும், பலியும் நாடு முழுவதும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 1ம் தேதியில் இருந்து இன்று வரையிலான காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 22 நாட்களில் மட்டுமே நாடு முழுவதும் 6 லட்சம் பேர் பாதித்துள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். தினமும் 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்படும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை நாடு முழுவதிலும் இருந்து சேகரித்து, மறுநாள் காலை 8 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 49,310 பேர் பாதித்துள்ளதை தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்,740 பேர் இறந்துள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 30,601 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,208-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 34,602 பேர் குணம் அடைந்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 4,40,135 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இவற்றில் முறையே 3.37, 1.86, 1.26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதமாகும்.


Tags : winners ,Corona ,India , India, Corona, winners, rise, impact, kill
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...