×

ரேஷன்கடை ஊழியர் மீது வழக்கு

புழல்:சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி காந்திநகரில் மகளிர் ரேஷன் கடை உள்ளது. இங்கு, விற்பனையாளராக கலைமதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடையில் சரிவர உணவுப்பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கவில்லை என அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் தனுஜா டயானா இந்த கடையில் சோதனை செய்த போது, பொருட்கள் குறைவாக இறந்துள்ளது. மேலும் அரசு அதிகாரியை வேலை செய்ய தடுத்ததாக கலைமதி மற்றும் அவருடைய கணவர் கிருஷ்ணன் அவருடைய உறவினர்கள் ராஜா, கௌதம் ஆகிய 4 பேர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.  இந்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : ration shop employee , Ration shop, employee, case
× RELATED நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாததால்...