×

உடல் நலக்குறைவால் இறந்த ஏட்டு குழந்தைகளுக்கு நிதியுதவி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் துரைமுருகன். இவர், 1999ம் ஆண்டு 2ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 25ம் தேதி துரைமுருகன் இறந்தார். இதையடுத்து, இவருடன் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக போலீசார் ஒன்று சேர்ந்து, துரைமுருகனின் குழந்தைகள் நலன் கருதி உதவ முடிவு செய்தனர். அதன்படி ரூ.13 லட்சத்து 91 ஆயிரத்து 600 சேகரித்து, அவர்களது குழந்தைகள் பெயரில் வைப்பு நிதியாக வழங்க முடிவெடுத்து, அதற்குரிய ஆவணங்களை மாவட்ட எஸ்பி அரவிந்தன் வாயிலாக, துரைமுருகனின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக போலீசார் உடனிருந்தனர்.

Tags : children , Dead record, child, financial aid, due to ill health
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...