×

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரை முற்றுகையிட்டு கொரோனா நோயாளிகள் போராட்டம்: பஸ்சில் அழைத்து சென்று அலைக்கழித்ததால் ஆத்திரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா  பாதிப்பு அதிகரிக் நேற்று வரை மாவட்டத்தில் 5937 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 3051பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2812 பேர் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்தனர்.

இதைதொடர்ந்து, அரசு பஸ் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள நோயாளிகளை பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று எங்கும் இடமில்லாததால், பல மணி நேரம் அலைய செய்து, மீண்டும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக கொரோனா நோயாளிகள், மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் கல்பனாவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : government hospital superintendent ,Corona , Government Hospital, Superintendent, Siege, Corona Patients, Struggle
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...