×

வண்டலூர் அருகே வெவ்வேறு சம்பவம் முதியவர், சிறுமி மர்மச்சாவு: கொலையா? விசாரணை

கூடுவாஞ்சேரி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (72). வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பிரதான சாலையோரத்தில், டாஸ்மாக் கடை அருகே சொந்தமாக சென்ட்ரிங் கடை நடத்தி வந்தார். அங்கேயே தங்கினார்.
இந்நிலையில், நேற்று காலை அவரது கடைக்கு சென்ட்ரிங் பொருட்களை எடுப்பதற்காக மேஸ்திரிகள் வந்தனர். அப்போது, கடை பூட்டி இருந்தது. பின்னர், அதே பகுதியில் வசிக்கும் அவரது மகன் தனசேகருக்கு போன் செய்தனர். அதன்பேரில் அவர் வந்து, கடையை திறந்து பார்த்தபோது, வேல்முருகன் நிர்வாணமாக, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி பொன்னியம்மன் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் குப்பன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி கௌரி (32). இவர்களது மகள் மாரியம்மாள் (8). நேற்று காலை  தம்பதி வேலைக்கு சென்றனர்.  வீடு திரும்பினர். அப்போது, அருகில் உள்ள ஏரியில் சிறுமி நிர்வாண நிலையில், சடலமாக கிடந்ததை கண்டுஅதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி இரு சம்பவங்கள்குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர், சிறுமி கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.

Tags : Marmachavu ,incident ,Vandalur Old man ,Murder ,Investigation , Vandalur, incident, old man, girl, mystery, murder? , Hearing
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...