×

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்!!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இ - பாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்குச் சென்றாரா என்ற கேள்வியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் செய்தியாளர்கள் முன்வைத்தனர். இதற்குப் பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஊரடங்கு காலத்தில் 1.5 லட்சம் மக்கள் இ-பாஸ் பெற்று சென்னையிலிருந்து சென்றுள்ளனர். குறிப்பாக 3.5 லட்சம் விண்ணப்பங்கள் அனுமதி இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, 1.5 லட்சம் விண்ணப்பங்களில் ரஜினிகாந்த்  பெயர் இருக்கிறதா அல்லது அவரின் குடும்பத்தாரின் பெயரில் விண்ணப்பம் ஏதும் இருக்கிறதா என்கின்ற விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பிறகே ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று சென்றாரா என்ற விவரம் தெரியவரும்.ரஜினிகாந்த் இ-பாஸ்  பெற்று சென்றிருக்கலாம், பெறாமலும் சென்றிருக்கலாம். ஆய்வு செய்த பிறகுதான் அதற்குரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கும். ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். நாளை அது குறித்த தகவலைத் தெரிவிக்கிறேன், என பிரகாஷ் தெரிவித்தார்.

Tags : Prakash ,Rajinikanth , Rajini, E-Pass, Travel, Police, Operations, Corporation Commissioner, Prakash
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...