×

முககவசம் அணியாமல் வந்த பஸ் பயணிகளுக்கு அபராதம்..!

சின்னாளபட்டி: கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செம்பட்டி – ஒட்டன்சத்திரம் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரகணக்கான வாகனங்கள் செல்கின்றன. கன்னிவாடி காவல்நிலையம் அருகே கன்னிவாடி சுகாதார ஆய்வாளர்கள் கோபால் மற்றும் அருண்குமார் தலைமையில் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், சுகாதாரத்துறை பயிற்சி மாணவர்கள் ரூ.200 அபராதம் வசூலித்து ரசீது வழங்கினர். மேலும் அந்த வழியாக சென்ற டவுன் பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்துள்ளனரா என ஆய்வு செய்தனர். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதித்ததுடன், முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தினர். இது போல பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரி தலைமையில் கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களுக்கு சென்ற அலுவலர்கள், அங்கு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்….

The post முககவசம் அணியாமல் வந்த பஸ் பயணிகளுக்கு அபராதம்..! appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,health department ,Kanniwadi ,Dindigul ,District ,Redyarchatram Union ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...