×

அமைச்சரின் சகோதரர் தோட்டத்தில் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் அருகே அமைச்சரின் சகோதரர் தோட்டத்தில் வசித்து வந்த தொழிலாளி நேற்று மின்சாரம் தாக்கி பலியானார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனின் சகோதரர் ஆவார். கணேசனுக்கு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பையனாபுரத்தில் தோட்டம் உள்ளது. இங்குள்ள மாந்தோப்பு பராமரிப்பு பணிக்காக கிருஷ்ணகிரியை சேர்ந்த சீதாபதி (48) என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். சீதாபதி, தோட்டத்தில் குடியிருந்து கொண்டு 9 தொழிலாளர்களை வைத்து பராமரிப்பு பணி செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சீதாபதி, தொழிலாளர்களுக்கு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வாசற்படியின் மேல் உள்ள இரும்புக் கம்பியை பிடித்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சத்தம் போட்டபடி கீழே மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொழிலாளர்கள் அளித்த புகாரின்பேரில், தாளவாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : brother ,minister ,garden worker ,garden , minister's brother,gardener, struck ,electricity , killed
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...