×

திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நெடுங்குளம் கண்மாய் தூர் வாரும் பணியை நேற்று துவக்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் அளித்த பேட்டி:
 தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. வெளிநாடுகளில் திரையரங்குகளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம்  பார்க்கின்றனர். அம்முறையை இங்கு நடைமுறைப்படுத்தினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது, நஷ்டத்துடன் இயக்க வேண்டிய சூழ்நிலை வரும். திரைப்படத்துறையினருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. நிலைமையை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Theaters ,Kadampur Raju ,Minister ,Kadampur Raju Theaters , Theater, not likely to open, Minister Kadampur Raju, informed
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...