×

கேரள கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து கேரளாவில் சபரிமலை, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில், குருவாயூர் கோயில் உட்பட எல்லா கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தாலும், கடந்த 4 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் தரிசனம் செய்ய  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். ஆனால், கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : temples ,devotees ,Kerala , Kerala Temple, Devotee, Permission
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா