தென்காசி: தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர்தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மண்டலம் 1967ம் ஆண்டு முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மண்டலத்தில் ஆளுகை பகுதியில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளது.
துணை முதல்வர் 2019-20 ஆம் ஆண்டறிக்கையின் அறிவிப்பிற்கிணங்க நகர் ஊரமைப்பு துறையின் சார்நிலை அலுவலகம் இல்லாத மாவட்டங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் மண்டல அலுவல்களை மறுசீரமைத்து மாவட்ட அலுவலகம் ஆரம்பிக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில் உதவி இயக்குனர் அலுவலரை கொண்டு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் நம்பர் 5, பாரதி நகர் முதல் தெரு, மேலகரம். அஞ்சல். தென்காசி மாவட்டம் என்ற முகவரியில் கடந்த 17ம்தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றிற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.