×

பாதிப்பு 2060 ஆக உயர்வு; மணிப்பூர் மாநிலத்தில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்...முதல்வர் பிரேன் சிங் உத்தரவு.!!!

இம்பால்: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் தணியாமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. உலக முழுவதும் கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இருப்பினும், இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஏற்றவாரு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நாளை மதியம் 2 மணி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 2060 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை யாரும் உயிரிழக்காத நிலையில், 1418 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Brian Singh ,Manipur , Vulnerability rises to 2060; Full curfew to be imposed in Manipur for 14 days from tomorrow ... Chief Minister Brian Singh orders !!!
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது