×

சாத்தான் குளத்தில் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணை!!!

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான் குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த மே மாதம் காவல் நிலையத்தில் வைத்து போலீசாரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மகேந்திரம் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் காவல் நிலையத்தில் வைத்து தனது மகனை தாக்கியதுதான் என்று இளைஞரின் தாயார் வடிவு உயநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிசிஐடி மற்றும் டி.எஸ்.பி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி வந்துள்ளனர்.

தற்போது தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகரில் வசித்து வரும் மகேந்திரனின் தயார் வடிவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. சட்டவிரோதமாக மகன் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Tags : death ,pool ,investigation ,CBCID ,Satan ,Mahendran , CBCID police , intensive investigation ,Mahendran's death,
× RELATED கர்நாடக பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்!