×

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கு...! 3 காவலர்களுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் 3 காவலர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சாமதுரை செல்லதுரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் வைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர்கள் மரணம் அடைய, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றது.

இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோர் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட இருந்தனர். இந்த நிலையில், காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிபிஐ காவல் நாளை மாலை உள்ள நிலையில் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதியானதால் முன்கூட்டியே நீதிமன்றத்தில் 3 காவலர்களை ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டனர். இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள்  காவலர்கள் 3 பேருக்கும் ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : guards ,Sathankulam , Sathankulam, father, son, murder case, court custody
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா