பெய்ஜிங் : ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு வைத்து முக்கியமான டாக்குமென்ட்கள் எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருவதாக அமெரிக்கா மீடியாக்களில் செய்தி வெளியானது. இதற்கிடையில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை 72 மணி நேரத்திற்குள் மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது.