×

புதுகை அருகே 108ல் பெண்ணுக்கு குவா குவா

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே எருக்குமணிப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ஐஸ்வர்யா(23). நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ராப்பூசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். பின்னர் இலுப்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை நோக்கி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது முத்துடையான்பட்டி எனும் இடத்தில் ஐஸ்வர்யா பிரசவ வலியால் துடித்தார். இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவா பாஸ்கரன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய் ஐஸ்வர்யா மற்றும் குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags : Pudukai ,Pudukkottai , Pudukkottai , 108 ambulance,
× RELATED புதுகையில் பாதிரியார் வீட்டில் நகை...