×

பெண்ணிடம் நகை பறிப்பு

புழல்: செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டல் கழனி கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் செல்வராணி (36). இவர், அருகில் உள்ள மருந்து கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலையில் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு மர்ம ஆசாமி வீட்டுக்குள் புகுந்து செல்வராணி அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டான். தகவலறிந்த செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Girl, jewelry, flush
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...