×

அம்மன் சிலை கண்டெடுப்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தில் ஸ்ரீகல்யாண வரதராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று விவசாய நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டிருந்தார். அப்போது, டிராக்டர் கலப்பையில் சத்தம் வந்தது. இதனால் வண்டியை நிறுத்தி பார்த்தார். அப்போது செம்பால் ஆன அம்மன் சிலை டிராக்டரின் கலப்பையில் சிக்கி உடைந்து கிடந்தது. இதுகுறித்து திருத்தணி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். தாசில்தார் உமா, கனகம்மாசத்திரம் வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு விஜயகாந்த் (பொ) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். செம்பால் ஆன அம்மன் சிலையை மீட்டு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து சிலையை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Goddess, idol, discovery
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...