×

செல்போன், பணம் திருட்டு

புழல்: புழல் அடுத்த டீச்சர்ஸ் காலனி 3வது பகுதியை சேர்ந்தவர் சந்திரஹாசன் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் தூங்கச் சென்றார். பின்னர் நேற்று காலையில் வழக்கம்போல் கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த விலை உயர்ந்த செல்போன், ரூ.19,000 ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது. புகாரின்பேரில். புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : Cellphone, money, theft
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...