×

வரலாறு காணாத மழை... பயத்தின் உச்சத்தில் சீனா

வூஹான்: எந்நேரம் வேண்டுமானாலும் The Gorges Dam உடையலாம் என்பதால் வூஹான் மாகாணத்தை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தது சீனா. முதல் கட்டமாக 10 கோடி பேரை இடம் மாற்றுகிறது சீனா.

வரலாறு காணாத மழை காரணமாக The Gorges Dam முழுமையாக நிரம்பிவிட்டது. நேற்று அந்த அணை இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் அணையின் அஸ்திவாரங்கள் முற்றிலுமாக ஸ்திரமற்று போய்விட்டன. அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகபட்ச நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கிறது. உலகின் முன்றாவது மிகப்பெரிய ஆற்றின் நடுவே இந்த அணை கட்டப்படடுள்ளது. உலகின் மிகப்பெரிய அணையும் இதுவே ஆகும்.

இந்த அணை இப்போது பெய்யும் வரலாறு காணாத மழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக எந்நேரமும் உடையலாம் என்பது திட்டவட்டமாக தெரிந்துவிட்டது. ஒரு வேளை இந்த அணை உடைந்தால் 4  முதல் 50 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி. குறைந்த பட்சம் 5 கோடி இறப்பார்கள் என்பதால், 20 கோடி பேரை பாதுகாப்பான மாநிலங்களுக்கு உடனடியாக பயணப்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த அணையை கட்டாதே என அன்று உலகமே கெஞ்சியது. நொடிக்கு 36000 Cmr நீரை திறந்து விட்டும் அணையின் நீர்மட்டம் குறைந்தபாடில்லை.

எவ்வளவு நீரை திறந்தாலும், திறந்து விடும் நீரின் அளவை விட அணைக்கு 100 மடங்கு நீர்வரத்து இருப்பதால் அணையை காப்பாற்றுவது சந்தேகமே. கடைசி 1 மணி நேரத்தில் 163Mtr இருந்து 23 Cmr உயர்ந்து 163.23 Mtr ஆக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் The Gorges Dam தனது முழுக்கொள்ளலவான 175 Mtr அதாவது 600 அடி உயரத்தை அடைந்து அணை நிரம்பி வழியும். தற்போது சீனாவுக்கு உள்ள ஒரே தீர்வு மழை நிற்க வேண்டும். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்யும் என உலக வானிலை மையம் அறிவித்துள்ளது.



Tags : China , Rain, China
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்