×

புதுக்கோட்டை அருகே இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிசூடு!!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை அருகே தேர்தல் காரணமாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலை தடுக்க காவல் துறையினர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். தேர்தல் காரணமாக பல்வேறு இடங்களில் மோதல் மற்றும் கொலை முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால், தேர்தல் முன்விரோதம் காரணமாக இதுவரை பலர் படுகாயமடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது, இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் பேசாம்பட்டியில் தேர்தல் காரணமாக ஒரே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளது.

இதனால், இன்று காலை இருதரப்பினர்களுக்கும் பிரச்சனை முற்றிய நிலையில் பெரும் வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர், வாக்குவாதமானது மோதலாக மாறி ஒருவரையொருவர் அரிவாளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது, மோதலில் ஈடுபட்டிருந்த திருநாவுக்கரசு மற்றும் நடராஜன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, காயமடைந்த இருவரையும் சிகிச்சைகாக கே.புதுப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருதரப்பினரையும் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாதது தொடர்ந்து சண்டையிட்டு கொண்டதால், மோதலை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : clash ,Pudukkottai , Police fire to control bilateral clash near Pudukkottai !!!
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை