மதுரை: ஊரடங்கு விதிகளை மீறி போராட்டம் நடத்திய 60 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பேக்கேஜ் டெண்டர் முறையை கண்டித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற 14 பெண்கள் உள்பட 60 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.