×

ஓடும் காரில் திடீர் தீ

திருத்தணி: திருவாலங்காடு தெற்குமாட வீதியை சேர்ந்தவர் கமலேஷ்  (22). இவர் அரக்கோணம், திருவள்ளூர் சாலையில் பழையனூர் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது காரை, இரவில் மெக்கானிக் செட்டில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று காலை செட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த கமலேஷ், இறங்கி வந்து பார்த்தபோது குபுகுபுவென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கமலேஷ் அங்கிருந்து ஓடினார். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.


Tags : fire , In a running car, a sudden fire
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...