×

முத்தூட் அறக்கட்டளை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி

சென்னை: முத்தூட் பைனான்ஸ் லிமிடெட், அதன் குழுவான முத்தூட் எம் ஜார்ஜ் அறக்கட்டளை  சார்பில், முத்தூட் விவாஹசம்மானம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2020 ஆகஸ்ட் - டிசம்பர் மாதங்களுக்கு இடையில் திருமணம் செய்யும், பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவை தாய்மார்களின் மகள்கள் 20 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இவர்களின் மாத வருமானம் ரூ.10,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதுகுறித்து முத்தூட் பைனான்ஸ் லிமிடெட் நிறுவன செயல் இயக்குநர் ஜார்ஜ் எம்.ஜேக்கப் கூறுகையில், “இந்த உதவியை பெற தகுதியான பெண்களின் தாய்மார்கள் உள்ளூர் கவுன்சிலர் அல்லது பஞ்சாயத்து உறுப்பினர் அல்லது எம்எல்ஏ சான்றளிப்பு கடிதத்துடன் ஒரு விண்ணப்பம் மற்றும் திருமண அழைப்பிதழை இணைத்து வழங்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கக் கடைசி தேதி 30/07/2020. விண்ணப்ப உறையில் ‘திருமண பரிசுக்கான விண்ணப்பம்’ (Application for Marriage Gift) என்ற சொற்கள் தெளிவாக குறிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி: முத்தூட் பைனான்ஸ் லிமிடெட், தலைமை அலுவலகம், கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துறை, முத்தூட்  சேம்பர்ஸ், சரிதா தியேட்டர் வளாகம் எதிரில், பானர்ஜி சாலை, எர்ணாகுளம் -  682 018. [Muthoot Finance Ltd, Head Office, Corporate Communications Dept., Muthoot Chambers, Opp. Saritha Theatre Complex, Banerji Road, Ernakulam - 682 018] மேலும் விவரங்களுக்கு 0484 6690386/353 என்ற எண்களுக்கு அழைக்கலாம்,’’ இவ்வாறு தெரிவித்தார்.

Tags : women ,Muthoot Foundation , Muthoot Foundation, marriage assistance to poor women
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது