×

கொரோனாவில் இருந்து மீண்ட போலீசாருக்கு வரவேற்பு

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம், அமைந்தகரை காவல் நிலையத்தில் 2 ஆய்வாளர்கள் உள்பட 5 போலீசாருக்கு கடந்தமாதம் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பூரண குணடைந்து கடந்த  சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினர். இந்நிலையில், அரும்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் சங்கர், அமைந்தகரை குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் நசிமா உள்பட 5 போலீஸ்காரர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். முன்னதாக இவர்களுக்கு காவல்நிலைய வாசலில் மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையர் ஜவஹர், உதவி கமிஷனர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Corona, overcoming, to the police, welcome
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...