×

ஆபாச அவதூறுகளை பதிவிடும் சமூக விரோதிகளை கண்டித்து 22ம் தேதி ஆர்ப்பாட்டம்: முத்தரசன் பேட்டி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அலுவலகம், பாலின சமத்துவ செயல்பாட்டாளர் மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்த ஆபாசப் பதிவுகள் போட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 17ம் தேதி மற்றும் 20ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு புகார் விண்ணப்பங்கள் நேரில் கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் எழுச்சி கொண்டு ஜனநாயக நெறிமுறைகளை, அரசியல் அமைப்பு சட்டம் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளை பாதுகாக்க வேண்டிய கடமையை காலம் முன்நிறுத்தியுள்ளது. இதனை ஏற்று வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம். மதவெறி, சாதிவெறி சக்திகளை தோற்கடிப்போம். மனித மதிப்புகளை பாதுகாக்க பாடுபடுவோர் அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவோம். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Tags : Demonstration ,Mutharasan ,interview , Pornography, Posting, Anti-Social, Condemnation, 22nd, Demonstration, Mutharasan Interview
× RELATED ஹிட்லரை பின்பற்றும் பிரதமர் மோடி: இரா.முத்தரசன் தாக்கு