×

கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்தின்றி பசுமை நகராக மாறியது கொடைக்கானல்

திண்டுக்கல்: தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வர். இங்கு தற்போது காலை நேரத்தில் இதமான வெயில், அவ்வப்போது மேகக் கூட்டம், உடலை வருடும் குளிர் என ரம்மியமான சூழல் நிலவுகிறது. இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வர முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால், கோக்கர்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, குணா குகை, ஏரி, பூங்கா என அனைத்து பகுதிகளில் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நகரின் மையப் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்றின் வேகத்தால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இதனால் கொடைக்கானல் நகரமே களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

வாகன போக்குவரத்து மற்றும் ஆள்நடமாட்டம் இல்லாததால் சுத்தமான பசுமை நகரமாக மாறியிருக்கிறது கொடைக்கானல். இதனால் ஆடிமாதம் தொடக்கத்தில் இருந்தே காற்றின் வேகம் அதிகரித்ததோடு கடும் குளிரும் நிலவுகிறது. ரம்மியமான சூழல் நிலவும் இந்த நாட்களில் காலைமுதல் பனிமூட்டங்கள் மலைசரிவுகளில் படர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது. கொடைக்கானலில் உள்ள கீழ்மலை, மேல்மலை மற்றும் நடுமலை பகுதிகளில் தொடர்ந்து சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் சாரல் மழையுடன் பனிமூட்டமும், காற்றும் சேர்ந்து கொள்வதால் மலைப்பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ளது.



Tags : Kodaikanal ,city ,Corona , Corona, Kodaikanal
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்