தென்காசி: தென்காசியில் ஜமுனா பாய் என்பவரின் கணவர் தற்கொலை குறித்து டி.எஸ்.பி.விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜமுனா பாய் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, டி.எஸ்.பி.விசாரணைக்கு உத்தரவிட்டது. போலீஸ் தாக்கியதால் மனமுடைந்து தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ஜமுனா பாய் வழக்கு தொடர்ந்து இருந்தார்.