கரூர்: கரூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தொடர்பாக பெயர் மாற்றம் செய்து சான்று வழங்க பெண் அலுவலர் ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்ததை அடுத்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.