புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நவ-15 ம் தேதி முதல் பள்ளிகளில் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டத்தில் மாணவருக்கு இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும் என நாராயணசாமி கூறியுள்ளார்.