×

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேலும் 3 காவலர்களை விசாரிக்க அனுமதிகோரி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்!!!

மதுரை:  சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைதான 3 காவலர்களை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது. சாத்தான் குளம் கொலை வழக்கில் இதுவரை சிபிசிஐடி போலீசார் 10 காவலர்களை ஏற்கனவே கைது செய்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 காவலர்களை கடந்த 14ம் தேதி சிபிஐ 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், காவலில் எடுத்த 5 காவலர்களிடமும் விசாரணையானது நிறைவு பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் மீதமுள்ள 5 காவலர்களை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணையானது மேற்கொள்ளப்படுவார்கள் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  தற்போது, சிபிஐ அதிகாரிகள் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மேலும் 3 காவலர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த மனுதாக்கல் செய்துள்ளனர். அதாவது, தாமஸ் பிரான்சிஸ், சாமதுரை மற்றும் செல்லத்துரை ஆகிய 3 காவலர்களை விசாரிக்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே 5 காவலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது மேலும்  3 காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டால், மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்பிருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போது 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மதுரை தலைமை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பின்னரே, எத்தனை நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : policemen ,Sathankulam ,Madurai Chief Criminal Court ,CBI , CBI files petition in Madurai Chief Criminal Court seeking permission to investigate 3 more policemen in Sathankulam murder case
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...