திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம் முழுவதும் சொப்னாவுக்கே சென்றது என்று சந்தீப் கூறியுள்ளார். தங்கக் கடத்தலின் லாபத்தின் ஒரு பகுதியை யுஏஇ தூதரக அதிகாரிக்கு சொப்னா கொடுத்தார் என்று சந்தீப் தகவல் தெரிவித்துள்ளார். கேரளத்தை உலுக்கிவரும் தங்கக்கடத்தலில் ஹவாலா கும்பல் ஈடுபட்டு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் ராணி சோப்னாவுடன் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் 4 முறை சந்தித்துள்ளனர் என்று சந்தீப் வாக்குமூலம் அளித்துள்ளார்.