×

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

சென்னை: தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கி இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. சொற்ப அளவிலான கோயில் பணியாளர்களை கொண்டு முகக்கவசம் அணிந்தும், 6 அடி சமூக இடைவெளி கடைப்பிடித்தும் திருவிழாக்கள் நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. கோயில் திருவிழாவில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெறவேண்டி இருந்தால், அனுமதி பெற்று திருவிழாக்கள் நடத்தலாம் என்றும்  இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.



Tags : festivals ,temples ,Tamil Nadu , Tamil Nadu, temples, festivals
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு