ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம், அன்னை மரியா நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (66). ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இந்நிலையில், இவரது வீட்டின் பீரோவை உடைத்து 8 சவரன் நகைகள், ரூ.2.20 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.