×

கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரிய தெருவில் ராமர் கோயில் உள்ளது. இது அந்த பகுதியில் பிரபலமான கோயிலாகும். இந்நிலையில், இந்த கோயிலை நேற்று காலை பூசாரி மணி என்பவர் திறக்க வந்தார். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த ஐம்பொன் விநாயகர் சிலை மற்றும் 2 கிராம் தங்கம் நகைகள் கொள்ளை போயிருந்தது. புகாரின் பேரில் திருத்தணி போலீசர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Tags : Temple, idol, theft
× RELATED சிங்கப்பூரில் இருந்து வந்த விமான...