பொன்னேரி: மீஞ்சூர் ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி ஆணையர் நடராஜ் முன்னிலை வகித்தார். மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குடிநீர், சாலை வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ஒன்றியங்களில் பழுதடைந்த பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி கட்டிடங்களை அகற்ற வேண்டும். புதிய ரேஷன் கடைகளை அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். மீஞ்சூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.