×

மின்கட்டண உயர்வைக் கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (21ம் தேதி) மின்கட்டண உயர்வைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட  திமுக செயற்குழுக் கூட்டம்  சின்னகாஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் எழிலரசன், புகழேந்தி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மறைந்த மாவட்ட அவைத்தலைவர் ஜி.சுகுமார் திருஉருவபடத்திற்கு மாலை அணித்து மலர்தூவி  மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, அதிமுக அரசால் மின்கட்டணம் அதிகமாக வசுலிக்கபடுவதால் அதை கண்டித்து  நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் திமுகவினர் தங்கள் வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவ ட்ட நிர்வாகிகள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், மதுராந்தகம் நகர செயலாளர் குமார், ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.குமார், ஞானசேகர், குமணன், சேகர், ஸ்ரீதர், ராமச்சந்திரன், தம்பு, சத்யசாய், டி.குமார். ஏழுமலை, நிர்வாகிகள், பாண்டியன், இனியரசு, விஜயகணபதி, அப்துல்மாலிக். அபுசாலி, தமிழ்செல்வன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,executive committee meeting ,houses ,homes , Black flag in homes, condemnation of electricity tariff hike, protest tomorrow, DMK, resolution
× RELATED டூவீலர் மெக்கானிக் சங்க மாநில செயற்குழு கூட்டம்